பதிவு செய்த நாள்
25 மார்2021
20:46
புதுடில்லி:நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், 7 முக்கியமான நகரங்களில், வீடுகள் விற்பனை, 29 சதவீதம் அதிகரிக்கும் என, சொத்து ஆலோசனை நிறுவனமான, ‘அனராக்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, மேலும் தெரிவிக்கபட்டுள்ளதாவது:நாட்டில் உள்ள முக்கியமான, 7 நகரங்களில், ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், மொத்தம், 58 ஆயிரத்து, 290 வீடுகள் விற்பனை ஆகும் என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இவற்றில், மும்பை மற்றும் புனேவின் பங்களிப்பு, 53 சதவீதமாகும்.
முத்திரைத்தாள் கட்டணம் குறைக்கப்பட்டது, வீட்டுக் கடன் வட்டி குறைப்பு, கட்டுமான நிறுவனங்களின் தள்ளுபடி ஆகியவை, இங்கு விற்பனை அதிகரிக்க காரணமாக இருந்தன.சென்னையை பொறுத்தவரை, வீடுகள் விற்பனையில், 30 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டிருக்கிறது. வீடுகளின் விலையை பொறுத்தவரை, இந்த காலகட்டத்தில், 1–2 சதவீதம் அளவுக்கு விலை அதிகரித்திருக்கிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|