பணப் பரிவர்த்தனை செலவினம் குறையும் பணப் பரிவர்த்தனை செலவினம் குறையும் ...  எல்.ஐ.சி., பங்கு விற்பனையில் ரூ.1 லட்சம் கோடி எல்.ஐ.சி., பங்கு விற்பனையில் ரூ.1 லட்சம் கோடி ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வாகன கூட்டமைப்பு மனு மத்திய அரசு நிராகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2021
20:13

புதுடில்லி:வாகனப் புகையில், மாசுபாட்டை குறைக்கும் திட்டத்தின் அமலாக்கத்தை தள்ளி வைக்குமாறு, வாகன கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து உள்ளது.

மத்திய அரசு, காற்று மாசுபாட்டை குறைக்க, பசுமை தொழில்நுட்ப வாகன தயாரிப்பை ஊக்குவித்து வருகிறது. இதன்படி, வாகன புகையில் மாசு குறைவாகவும், மேம்பட்ட எரிபொருள் திறனிலும் செயல்படுவதற்கான ‘கேப்’ விதிமுறை, 2017ல் அறிமுகமானது. இதில், முதற்கட்டமாக, 1 புதிய கார், 1 கிலோ மீட்டர் செல்லும் போது வெளியிடும் புகையில், கரியமில வாயு, 130 கிராம் மட்டுமே இருக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி, வாகன புகையில் மாசுபாட்டை குறைப்பதற்கான தொழில்நுட்பங்களில், தயாரிப்பு நிறுவனங்கள் முதலீடு செய்தன. இந்நிலையில், கேப் விதிமுறையில், அடுத்த கட்ட கட்டுப்பாடு, 2022, ஏப்., 1ல் அமலுக்கு வர உள்ளது.இதில், 1 கிலோ மீட்டர் செல்லும் போது, கார் வெளியிடும் புகையில், கரியமில வாயுவின் அளவு, 113 கிராம் ஆக குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறையை அமல்படுத்த அதிக முதலீடு தேவைப்படுவதால், புதிய விதிமுறையின் அமலாக்கத்தை தள்ளி வைக்குமாறு, வாகன தயாரிப்பு நிறுவனங்கள், மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தன.அதை ஏற்க மறுத்துள்ள மத்திய அரசு, திட்டமிட்டபடி, அடுத்த ஆண்டு, புதிய விதிமுறை அமலுக்கு வரும் என உறுதியாக தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)