பதிவு செய்த நாள்
28 மார்2021
22:34

கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட, குறுகிய கால மருத்துவ காப்பீடு பாலிசிகளை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை வழங்க, காப்பீடு
ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா, தொற்று தீவிரமான போது, இந்த பாதிப்பிற்கான மருத்துவ
செலவை எதிர்கொள்ளும் வகையில், கொரோனா கவச் மற்றும் கொரோனா ரக்ஷக் ஆகிய, குறுகிய கால மருத்துவ காப்பீடு பாலிசிகள் அறிமுகம் செய்யப்பட்டன.இந்த பாலிசிகளுக்கான நெறிமுறைகளை, கடந்த ஆண்டு ஜூன் மாதம், காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டது.
மூன்று மாதம், ஆறு மாதம் மற்றும் ஒன்பது மாத காலம் கொண்டு இந்த பாலிசிகள் அமைந்திருந்தன. இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை, இந்த பாலிசிகள் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், இந்த பாலிசிகளுக்கான கால அளவை, இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் நீட்டித்துள்ளது.
இதனையடுத்து, மேலும் ஆறு மாத காலத்திற்கு, இந்த குறுகிய கால மருத்துவ காப்பீட்டை பெறும் வாய்ப்பு உண்டாகியுள்ளது. அனைத்து காப்பீடு நிறுவனங்களும் இவற்றை வழங்கும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|