பதிவு செய்த நாள்
30 மார்2021
20:09
புதுடில்லி:சரக்குபோக்குவரத்து துறையில் இருக்கும், மின்னணு லாஜிஸ்டிக் நிறுவனமான, ‘டெல்லிவரி’ புதிய பங்கு வெளியீட்டுக்கு வர திட்டமிட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, இந்நிறுவனத்தின் இரண்டு இணை நிறுவனர்கள் தங்கள் பொறுப்புகளிலிருந்து விலக உள்ளனர். டெல்லிவரி நிறுவனத்தின் நிறுவனர்களின் எண்ணிக்கை ஐந்து ஆகும். இதில் இரு நிறுவனர்கள், புதிய பங்கு வெளியீட்டின்போது தங்களுடைய பங்குகளை விற்பனை செய்யும் நோக்கத்துடன், தற்போதைய பொறுப்புகளிலிருந்து வெளியேறுகின்றனர்.
பவேஷ் மங்லானி மற்றும் மோஹித் டாண்டன் ஆகிய இருவரும் நிறுவனத்தின் அன்றாட செயல்பாடுகளிலிருந்து வெள்யேறி, செயல் சாரா நிறுவனர்களாக பொறுப்பு வகிக்க உள்ளனர்.ஒரு நிறுவனம் பட்டியலிடப்படுவதற்கு முன்பாக, அதன் நிறுவனர்கள், தங்கள் பங்குகளை விற்பனை செய்வதற்கு காலத் தடை ஒன்று உண்டு.
இதன் காரணமாகவே, இவர்கள் இருவரும் தங்களுடைய பொறுப்புகளிலிருந்து விலகுகிறார்கள்.கடந்த, 2011ம் ஆண்டில், இந்நிறுவனம் துவங்கப்பட்டது. சாப்ட்பேங்க், டைகர் குளோபல், கார்லைல், கனடா பென்ஷன் பண்டு உள்ளிட்ட முதலீட்டாளர்களைக் கொண்டது இந்நிறுவனம்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|