பதிவு செய்த நாள்
31 மார்2021
11:11
இந்திய ரயில்வே நிறுவனத்தின் துணை நிறுவனமான, ஐ.ஆர்.எப்.சி., பத்திர வெளியீடு மூலமாக, 1,375 கோடி ரூபாய் நிதியை திரட்டி இருப்பதாக தெரிவித்துள்ளது. இருபதாவது ஆண்டில் முதிர்ச்சியடையும் வகையிலான, 6.80 சதவீத வட்டி வருவாய் கொண்ட இந்த பத்திரம், அரசாங்கத்தின் பத்திரங்களின் வருவாயைவிட, 18 அடிப்படை புள்ளிகள் குறைவானதாகும். ஐ.ஆர்.எப்.சி., பத்திரங்கள் மீது, நாட்டின் கடன் பத்திர முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையையே இது காட்டுகிறது என, நிறுவனம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த பத்திர வெளியீடு, முதலீட்டாளர்களிடமிருந்து குறிப்பாக, நீண்டகால தீவிர முதலீட்டாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடப்பு நிதியாண்டில் ரயில்வே அமைச்சகம் நிர்ணயித்திருக்கும் கடன் இலக்கை அடிப்படையாகக் கொண்டு 1,375 கோடி ரூபாயை தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. நடப்பு நிதியாண்டில், உள்நாட்டு மூலதன சந்தையில் 20 ஆண்டு பத்திர வெளியீடு மூலமாக திரட்டப்பட்ட நிதி 13,970 கோடி ரூபாயை எட்டியுள்ளது. எதிர்காலத்தில் இது போன்ற பத்திர வெளியீட்டுக்கான விலையை நிர்ணயம் செய்வதற்கான புதிய அளவுகோலையும் அமைத்துக் கொடுத்துள்ளது.
கடந்த, 6 ஆண்டுகளில், ஐ.ஆர்.எப்.சி நிறுவனம், இந்திய ரயில்வேக்கு வழங்கும், கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதம், 45.70 சதவீதமாக உள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளிலிருந்து, பலதரப்பட்ட வழிகளில் கடன் வாங்குவதன் மூலம், வருடாந்திர கடன் இலக்கு வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், 7 முதல், 10 ஆண்டுகள் வரையிலான காலவரையறை கொண்ட, வெளிநாட்டு நாணய கடன் மூலமாக, 3 பில்லியன் அமெரிக்க டாலர் கடன், முன்னணி பொதுத்துறை வங்கியின் மூலம் பெறப்பட்டுள்ளது. மேலும், 750 மில்லியன் அமெரிக்க டாலருக்கான, 10 ஆண்டு பத்திர வெளியீடு, அதிக வரவேற்பை பெற்று, கிட்டத்தட்ட நான்கு மடங்கு அளவுக்கு விண்ணப்பிக்கப்பட்டன. ஐ.ஆர்.எப்.சி வழங்கிய பத்திரங்கள், அதன் பட்டியலிடப்பட்ட ஆவணங்களின் இரண்டாம் நிலை சந்தை வருவாயை விட 7 முதல் 10 அடிப்படை புள்ளிகள் வரை குறைவாக இருந்தன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|