இந்தியர்களின் டிஜிட்டல் திறனுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உதவி இந்தியர்களின் டிஜிட்டல் திறனுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உதவி ...  அரசின் கடன் திட்டம் மேலும் 3 மாதம் நீட்டிப்பு அரசின் கடன் திட்டம் மேலும் 3 மாதம் நீட்டிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஜப்பான் வாகன தயாரிப்பாளர்களுக்கு உதவும் நடவடிக்கையில் எஸ்.பி.ஐ.,
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மார்
2021
19:35

புதுடில்லி:இந்தியாவில், கொரோனா பாதிப்புக்கு உள்ளான, ஜப்பானிய வாகன தயாரிப்பாளர்களுக்கு உதவுவதற்காக, எஸ்.பி.ஐ., வங்கி, 7,350 கோடி ரூபாயை, சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கியான, ஜே.பி.ஐ.சி.,யிடமிருந்து திரட்டி இருக்கிறது.

இது குறித்து, எஸ்.பி.ஐ., தெரிவித்து உள்ளதாவது:கடந்த ஆண்டு அக்டோபரில், ஒரு பில்லியன் டாலர், அதாவது, 7,350 கோடி ரூபாய் கடன் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில், எஸ்.பி.ஐ., கையெழுத்திட்டது.இதனையடுத்து, மொத்த கடன் இரண்டு பில்லியன் டாலர், அதாவது, 14 ஆயிரத்து, 700 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதன் மூலம், இந்தியாவில், ஜப்பானிய வாகன தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், ஆகியோருக்கு நிதி உதவி வழங்கப்படும். இந்த நிறுவனங்களின் வணிக நடவடிக்கைகள், தற்போது மீட்சி கண்டு வருகின்றன.இந்தியாவில் இருக்கும் ஜப்பானிய வாகன தயாரிப்பாளர்களின் வணிக நடவடிக்கைகள், எந்த இடையூறும் இன்றி சீராக நடைபெறுவதை ஊக்குவிக்கும் பொருட்டு, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜே.பி.ஐ.சி., நிறுவனம், ஜப்பான் நாட்டு அரசுக்கு சொந்தமான ஒரு நிதி நிறுவனமாகும். இந்நிறுவனம், ஜப்பான் நாட்டின் முன்னேற்றத்துக்கும், உலக பொருளாதாரத்துக்கும் உதவும் வகையில் செயல்பட்டு வருகிறது.இவ்வாறு எஸ்.பி.ஐ., தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)