பதிவு செய்த நாள்
31 மார்2021
19:35
புதுடில்லி:இந்தியாவில், கொரோனா பாதிப்புக்கு உள்ளான, ஜப்பானிய வாகன தயாரிப்பாளர்களுக்கு உதவுவதற்காக, எஸ்.பி.ஐ., வங்கி, 7,350 கோடி ரூபாயை, சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கியான, ஜே.பி.ஐ.சி.,யிடமிருந்து திரட்டி இருக்கிறது.
இது குறித்து, எஸ்.பி.ஐ., தெரிவித்து உள்ளதாவது:கடந்த ஆண்டு அக்டோபரில், ஒரு பில்லியன் டாலர், அதாவது, 7,350 கோடி ரூபாய் கடன் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில், எஸ்.பி.ஐ., கையெழுத்திட்டது.இதனையடுத்து, மொத்த கடன் இரண்டு பில்லியன் டாலர், அதாவது, 14 ஆயிரத்து, 700 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதன் மூலம், இந்தியாவில், ஜப்பானிய வாகன தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், ஆகியோருக்கு நிதி உதவி வழங்கப்படும். இந்த நிறுவனங்களின் வணிக நடவடிக்கைகள், தற்போது மீட்சி கண்டு வருகின்றன.இந்தியாவில் இருக்கும் ஜப்பானிய வாகன தயாரிப்பாளர்களின் வணிக நடவடிக்கைகள், எந்த இடையூறும் இன்றி சீராக நடைபெறுவதை ஊக்குவிக்கும் பொருட்டு, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜே.பி.ஐ.சி., நிறுவனம், ஜப்பான் நாட்டு அரசுக்கு சொந்தமான ஒரு நிதி நிறுவனமாகும். இந்நிறுவனம், ஜப்பான் நாட்டின் முன்னேற்றத்துக்கும், உலக பொருளாதாரத்துக்கும் உதவும் வகையில் செயல்பட்டு வருகிறது.இவ்வாறு எஸ்.பி.ஐ., தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|