பதிவு செய்த நாள்
31 மார்2021
19:37
புதுடில்லி:புதிய எஸ்.எம்.எஸ்., விதிகள் நடைமுறைக்கு வரும்நிலையில், வாடிக்கையாளர்கள் பெரிதாக எந்த சிக்கல்களையும் எதிர்கொள்ள மாட்டார்கள் என, பெரும்பாலான வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. மேலும், கடந்த முறை போன்ற எந்த பிரச்னைகளும் எழாது என்றும் தெரிவித்துள்ளன.
அண்மையில், தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’, பல்வேறு வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் தங்களுடைய எஸ்.எம்.எஸ்., சேவை குறித்த விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என தெரிவித்தது. மேலும் முன்னணி வங்கிகளான, எஸ்.பி.ஐ., எச்.டி.எப்.சி., ஆகிய வங்கிகள் கூட, இதை பின்பற்றவில்லை என குற்றம் சாட்டியது. இதையடுத்து, விதிமுறைகள் குறித்த நடைமுறைகளை, மார்ச், 31ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், இம்முறை பிரச்னைகள் ஏற்படாது என வங்கிகள் தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த முறை, புதிய விதிமுறை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட போது கூட, அன்றைய தினமே பிரச்னைகள் சரிசெய்யப்பட்டன. இருப்பினும், சில பாதிப்புகளை அடுத்து, தற்காலிகமாக, டிராய் அதை நிறுத்தி வைத்தது. ஆனால், இந்த முறை வாடிக்கையாளர்கள் எந்த நடைமுறை சிக்கலையும் சந்திக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளது.
மேலும், ஒருமுறை கடவு எண் உள்ளிட்ட குறுந்தகவல்கள் பெறுவதிலும் எந்த பிரச்னையும் இருக்காது என, வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிராய் விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களின், மொத்தமாக அனுப்பப்படும் குறுஞ்செய்தி சேவைகள் இனி பாதிக்கப்படலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|