பதிவு செய்த நாள்
01 ஏப்2021
20:40
புதுடில்லி:அனில் அம்பானி தலைமையிலான நிறுவனங்கள் கடனில் சிக்கித் தவிக்கும் நிலையில், கடனை அடைக்கும் முயற்சிகளில் ஒன்றாக, மும்பையில் தலைமை அலுவலகம் இருந்த, ‘ரிலையன்ஸ் சென்டர்’ கட்டடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அனில் அம்பானி தலைமையிலான, ‘ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர்’ நிறுவனம், ரிலையன்ஸ் சென்டர் கட்டடத்தை ‘யெஸ் பேங்க்’ நிறுவனத்துக்கு, 1,200 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது.கடந்த மூன்று மாதங்களில், ரிலையன்ஸ் இன்ப்ரா நிறுவனம், மூன்று முக்கியமான சொத்துகளை விற்பனை செய்திருக்கிறது.
ரிலையன்ஸ் இன்ப்ரா நிறுவனம், விற்றதன் மூலம் கிடைக்கும், 1,200 கோடி ரூபாயை, கடனை அடைக்க பயன்படுத்திக்கொள்ள இருக்கிறது.இதனையடுத்து, யெஸ் பேங்கில் இருக்கும், ரிலையன்ஸ் இன்போ நிறுவனத்தின் கடன், 4 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து, 2 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. நடப்பு ஆண்டில் கடன் இல்லாத நிறுவனமாக தங்கள் நிறுவனம் மாறும் என, ரிலையன்ஸ் இன்ப்ரா தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|