நேரடி வரி வருவாய் ரூ.9.45 லட்சம் கோடி நேரடி வரி வருவாய் ரூ.9.45 லட்சம் கோடி ... கேனன் சினிமா இஓஎஸ் அம்பாசிடராக இணைந்தார் சந்தோஷ் சிவன் கேனன் சினிமா இஓஎஸ் அம்பாசிடராக இணைந்தார் சந்தோஷ் சிவன் ...
பங்கு முதலீடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது அப்ஸ்டாக்ஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஏப்
2021
22:39

ஏறக்குறைய 30 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்தியாவின் இரண்டாவது பெரிய ஆன்லைன் பங்கு தரகு நிறுவனமான அப்ஸ்டாக்ஸ், பாரம்பரிய முதலீடுகளுடன், பங்கு முதலீடுகள் நிலையான வருமான ஆதாரமாக இருக்கும் என்று 130 கோடி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. கடந்த மார்ச் 16 அன்று அப்ஸ்டாக்ஸ் ஐ.பி.எல் உடனான பல ஆண்டு ஒப்பந்தத்தை அறிவித்தது. இந்தியாவின் மிகப்பெரிய வருடாந்திர விளையாட்டு நிகழ்வில் பங்கு முதலீடு மற்றும் மியூச்சுவல் பண்ட் துறையில் இருந்து ஒரு பிராண்ட் இணைவது இதுவே முதல் முறை ஆகும்.

இது தொடர்பாக அப்ஸ்டாக்ஸின் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ரவிக்குமார் கூறுகையில், ஐபிஎல் 2021க்காக பி.சி.சி.ஐ உடனான எங்கள் கூட்டாண்மை, நிதி சேர்க்கைக்கான பாதையில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். இதற்கு முன் யாரும் கண்டிராத ஒரு புது வகையான வர்த்தக கலாச்சாரத்தை கொண்டு வரும் அப்ஸ்டாக்ஸைப் போல, ஐபிஎல் கடந்த பத்தாண்டுகளில் இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு தைரியமான புதிய திசையை உருவாக்கியுள்ளது. ரத்தன் டாடா மற்றும் டைகர் குளோபல் மேனேஜ்மென்ட் போன்ற வெற்றிகரமான முதலீட்டாளர்களின் ஆதரவுடன் ஆன்லைன் பங்கு முதலீடுகள், டெரிவேட்டிவ்ஸ், பொருட்கள் , நாணயங்கள், மியூச்சுவல் பண்டுகள், இனிசியல் பப்ளிக் ஆப்பரிங் (IPO), நியூ பண்ட் ஆபர் (NFO), எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்ட்(ETF) மற்றும் டிஜிட்டல் கோல்ட் உள்ளிட்ட ஆன்லைன் முதலீடுகளை வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு அப்ஸ்டாக்ஸ் வழங்குகிறது, என்றார்.

மேலும் அவர் கூறுகையில், அப்ஸ்டாக்ஸ் நிறுவனம் 2021ஆம் நிதியாண்டில் சாதனை படைக்கும் எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களைச் சேர்த்தது. இதற்கு வளர்ந்து வரும் நிதி விழிப்புணர்வு, பங்கு பங்கேற்பு மீதான ஆர்வம், நிலையான தரகு கட்டணத்தில் உள்ளுணர்வு தொழில்நுட்பங்களை வழங்கும் டிஜிட்டல் வர்த்தக தளங்கள் மற்றும் எளிதான இணைய அணுகல் ஆகியவையே காரணம். அப்ஸ்டாக்ஸ் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 2 முதல் 3 லட்சம் புதிய கணக்குகளைச் இணைக்கிறது. ஜனவரி 2021 முதல், அப்ஸ்டாக்ஸ் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட டிமேட் கணக்குகளைச் சேர்த்துள்ளது. பயன்படுத்த எளிதான மொபைல் வர்த்தக பயன்பாடுகள், மேம்பட்ட கருவிகள் மற்றும் விருப்பங்களுடன் 100 சதவீதம் ஆன்லைன் கணக்கு திறக்க அனுமதிக்கின்றன. இது வர்த்தகத்தில் முதல் படியை எடுத்து வைக்க நிறைய பேரை தூண்டியுள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் பங்கு பங்களிப்பை 2 மற்றும் 3 அடுக்கு நகரங்கள் வழிநடத்தும் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது, என்று தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)