பதிவு செய்த நாள்
10 ஏப்2021
19:24
புதுடில்லி:பெங்களூரைச் சேர்ந்த, ‘ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் விண்ணப்பித்துள்ளது.
இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 800 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டு விண்ணப்பித்துள்ளது.இதில், 250 கோடி ரூபாய் மதிப்புக்கு புதிய பங்குகளையும்; 550 கோடி ரூபாய்க்கு, நிறுவனர்கள் வசம் இருக்கும் பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இந்த பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை கொண்டு கடன்களை அடைக்கவும், பொதுவான நிறுவன செலவுகளுக்கும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம், தென் மாநிலங்களில் அதிக அளவிலான வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. பல ரியல் எஸ்டேட் திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. மேலும் பல திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.அண்மையில், ரியல் எஸ்டேட் துறையிலிருந்து வந்த இரண்டு புதிய பங்கு வெளியீடுகள், கொரோனா பாதிப்புகளையும் மீறி வெற்றி பெற்றுள்ளன. ‘மைண்டு ஸ்பேஸ் பிசினஸ் பார்க்ஸ் ஆர்.இ.ஐ.டி.,’ நிறுவனம், கடந்த ஆண்டு ஆகஸ்டில், 4,500 கோடி ரூபாய் நிதியை திரட்டி பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட்டது.
அடுத்து, ‘மேக்ரோடெக் டெவலப்பர்ஸ்’ நிறுவனம், 2,500 கோடி ரூபாயை, புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டியது.இப்போது மூன்றாவதாக, ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் வர இருக்கிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|