பதிவு செய்த நாள்
22 ஏப்2021
20:00
புதுடில்லி:நாட்டின், ‘ஸ்மார்ட்போன்’ விற்பனை, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 10 – 15 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியை காணக்கூடும் என, ‘கவுன்டர்பாயின்ட் ரிசர்ச்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் மிகப் பெரிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது, இதற்கு முக்கிய காரணம் என்றும், கிட்டத்தட்ட, 50 லட்சம் ஸ்மார்ட்போன்கள் அளவுக்கு விற்பனை பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இது குறித்து, கவுன்டர்பாயின்ட் ரிசர்ச் நிறுவனத்தின் இயக்குனர் தருண் பதக் கூறிய தாவது:அண்மையில், ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்ட காரணத்தால், விற்பனை பாதிக்கப் பட்டு வருகிறது. இதன் காரணமாக, இந்த காலாண்டில் விற்பனை சரிவு, 10- – 15 சதவீதமாக இருக்க கூடும்.
இருப்பினும், இச்சூழல், வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பை அதிகரிக்கும் என்பதால், ஸ்மார்ட்போன் உள்ளிட்டவற்றின் தேவையும் இனி அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இதனால், நடப்பு முழு நிதியாண்டை பொறுத்தவரை சரிவு எதையும் எதிர்பார்க்கவில்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|