‘ டைம் ' இதழ் பட்டியலில் இடம்பிடித்த இந்திய நிறுவனங்கள் ‘ டைம் ' இதழ் பட்டியலில் இடம்பிடித்த இந்திய நிறுவனங்கள் ...  ‘பஜாஜ் ஆட்டோ’ தலைவர் ராகுல் பஜாஜ் ராஜினாமா ‘பஜாஜ் ஆட்டோ’ தலைவர் ராகுல் பஜாஜ் ராஜினாமா ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
விலைவாசி குறித்து ஆய்வு நடத்துகிறது ரிசர்வ் வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2021
21:06

மும்பை:ரிசர்வ் வங்கி, அதன் நிதிக்கொள்கையை வகுக்க உதவியாக இருக்கும் வகையில், பணவீக்க எதிர்ப்பார்ப்புகள், நுகர்வோர் நம்பிக்கை ஆகியவை குறித்து, வீடுகளில் கணக்கெடுப்பு நடத்துவது வாடிக்கை.

அந்த வகையில், மே மாத சுற்று குறித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த சுற்றில், விலைகளின் போக்கு மற்றும் பணவீக்கம் ஆகியவை குறித்து, கிட்டத்தட்ட, 6 ஆயிரம் குடும்பத்தினரிடம் ஆய்வு செய்யப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட, 18 நகரங்களில் இந்த கணக்கெடுப்பு நடைபெற இருக்கிறது.

விலைகளின் போக்கு, மூன்று மாதங்களில் எப்படி இருக்கும்; ஓர் ஆண்டில் எப்படி இருக்கும் என்பது குறித்தும் கேட்கப்படும்.இதேபோல், நுகர்வோர் நம்பிக்கை குறித்த மே மாத சுற்றில், 5,400 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்படும். இது சென்னை, மும்பை, திருவனந்தபுரம் உள்ளிட்ட, 13 தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் நடத்தப்படும்.

மேலும், பொருளாதார நிலைமைகள், வேலை வாய்ப்புகள், விலைவாசி உள்ளிட்டவை குறித்தும் கேட்டு அறிந்துகொள்ளப்படும்.இந்த ஆய்வை தனிப்பட்ட ஏஜென்சி ஒன்றின் வாயிலாக ரிசர்வ் வங்கி நடத்த உள்ளது. இந்த ஆய்வை முன்பு போல நேரிடையாக சென்று மேற்கொள்ளாமல், தொலைபேசி வாயிலாகவே மேற்கொள்ளப்பட உள்ளது. கொரோனா தொற்று காரணமாக இவ்வாறு முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் அடுத்த நிதிக் கொள்கை குழு கூட்டம், ஜூன் 2ம் தேதி முதல், 4ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)