பதிவு செய்த நாள்
05 மே2021
21:11
புதுடில்லி:‘ஐ.எச்.எஸ்., – மார்க்கிட் இந்தியா’ நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம், ஏப்ரல் மாத நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, கடந்த ஏப்ரலில், 54 புள்ளிகளாக உள்ளது. இது, இதற்கு முன், மூன்று மாதங்களில் இல்லாத குறைவாகும். கடந்த மார்ச் மாதத்தில் வளர்ச்சி, 54.6 புள்ளிகளாக இருந்தது.இந்த குறியீடு, 50 புள்ளிகளுக்கு மேல் இருந்தால், வளர்ச்சியையும்; 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவையும் குறிக்கும்.வணிக நடவடிக்கைகளில் உயர்வு கண்டு வந்த சமயத்தில், தொற்று நோய் பரவல் அதிகரிப்பு, ஏப்ரலில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.
வளர்ச்சி வாய்ப்புகள் மீதான நம்பிக்கை உணர்வையும் அது குறைத்துவிட்டது. இதன் காரணமாக, சேவைகள் துறையின் வளர்ச்சி குறைந்துள்ளது.வரும் ஆண்டுகளில் நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியை எதிர்நோக்கி இருந்த சமயத்தில், கொரோனா பாதிப்புகள் வணிக நம்பிக்கையை மீண்டும் குறைத்துவிட்டன.கடந்த, 2011ம் ஆண்டு டிசம்பர் முதலே, நிறுவனங்களின் ஒட்டுமொத்த செலவினங்கள் அதிகரித்து வந்துள்ளன. சில நிறுவனங்கள் ஏப்ரலில் விலையை உயர்த்தின. ஆனால், 98 சதவீத நிறுவனங்கள் போட்டியில் தாக்குப் பிடிக்க, விலையில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.
வேலை வாய்ப்பை பொறுத்தவரை, பணியாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து, 5வது மாதமாக குறைந்துள்ளது.இவ்வாறு அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|