ஸ்டெல்லாண்டிஸ் புதிய தலைமை நிர்வாகிகள்  நியமனம்ஸ்டெல்லாண்டிஸ் புதிய தலைமை நிர்வாகிகள் நியமனம் ...  ‘ஆன்லைன்’ மருந்து விற்பனை பலமடங்கு அதிகரிப்பு ‘ஆன்லைன்’ மருந்து விற்பனை பலமடங்கு அதிகரிப்பு ...
தொற்றால் பாதிப்பை சந்தித்த சேவைகள் துறை வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2021
21:11

புதுடில்லி:‘ஐ.எச்.எஸ்., – மார்க்கிட் இந்தியா’ நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம், ஏப்ரல் மாத நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, கடந்த ஏப்ரலில், 54 புள்ளிகளாக உள்ளது. இது, இதற்கு முன், மூன்று மாதங்களில் இல்லாத குறைவாகும். கடந்த மார்ச் மாதத்தில் வளர்ச்சி, 54.6 புள்ளிகளாக இருந்தது.இந்த குறியீடு, 50 புள்ளிகளுக்கு மேல் இருந்தால், வளர்ச்சியையும்; 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவையும் குறிக்கும்.வணிக நடவடிக்கைகளில் உயர்வு கண்டு வந்த சமயத்தில், தொற்று நோய் பரவல் அதிகரிப்பு, ஏப்ரலில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

வளர்ச்சி வாய்ப்புகள் மீதான நம்பிக்கை உணர்வையும் அது குறைத்துவிட்டது. இதன் காரணமாக, சேவைகள் துறையின் வளர்ச்சி குறைந்துள்ளது.வரும் ஆண்டுகளில் நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியை எதிர்நோக்கி இருந்த சமயத்தில், கொரோனா பாதிப்புகள் வணிக நம்பிக்கையை மீண்டும் குறைத்துவிட்டன.கடந்த, 2011ம் ஆண்டு டிசம்பர் முதலே, நிறுவனங்களின் ஒட்டுமொத்த செலவினங்கள் அதிகரித்து வந்துள்ளன. சில நிறுவனங்கள் ஏப்ரலில் விலையை உயர்த்தின. ஆனால், 98 சதவீத நிறுவனங்கள் போட்டியில் தாக்குப் பிடிக்க, விலையில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.

வேலை வாய்ப்பை பொறுத்தவரை, பணியாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து, 5வது மாதமாக குறைந்துள்ளது.இவ்வாறு அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)