பதிவு செய்த நாள்
05 மே2021
21:15
புதுடில்லி:கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, ‘ஆன்லைன்’ மருந்து நிறுவனங்களின் விற்பனை, மீண்டும் அதிகரித்துள்ளது.
மருத்துவ சாதனங்கள், கவச உடைகள், சத்து மாத்திரைகள், வழக்கமான மருந்துகள் ஆகியவை அதிகளவில் ஆன்லைன் வாயிலாக விற்பனையாகின்றன.குறிப்பாக, தொற்று அதிகம் காணப்படும் பெருநகரங்களில், ஆன்லைன் விற்பனை அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட, 25 சதவீதம் முதல், 65 சதவீதம் வரை விற்பனை அதிகரித்துள்ளதாக, ஆன்லைன் மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டின் மிகப் பெரிய ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனங்களில் ஒன்றான, 1எம்.ஜி., இது குறித்து தெரிவிக்கும்போது, கடந்த மார்ச் மாதத்தை விட, ஏப்ரலில் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.குறிப்பாக, ‘பேபிபுளு, டாக்ஸ்ஸி’ ஆகிய மருந்துகள் விற்பனை, கிட்டத்தட்ட, 40 முதல் 50 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சப்ளையில் சிக்கல்கள்இல்லாதபட்சத்தில், மருந்துகள் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இதேபோல், ‘வெல்னஸ் பாரெவர்’ நிறுவனமும் விற்பனை, 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துஉள்ளது.தெர்மோமீட்டர், ஆக்ஸிமீட்டர் போன்ற சாதனங்கள் அதிகம் விற்பனை ஆவதாக தெரிவித்துள்ளது. ஆன்லைனில் மருந்து வாங்குபவர்கள் எண்ணிக்கையும், 3 மடங்கு அதிகரித்துள்ளதாக, சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|