பதிவு செய்த நாள்
06 மே2021
20:19
புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த, எல்.ஐ.சி., எனப்படும் ஆயுள் காப்பீட்டு கழகத்தின் அனைத்து அலுவலகங்களுக்கும், சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஞாயிற்றுக்கிழமை, வார விடுமுறை என்பதால், இனி, வாரத்தில், ஐந்து நாட்கள் மட்டுமே, எல்.ஐ.சி., அலுவலகங்கள் இயங்கும். ‘நாட்டில் உள்ள அனைத்து எல்.ஐ.சி., அலுவலகங்களுக்கும், வாரந்தோறும், சனிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது; அன்று அலுவலகங்கள் இயங்காது’ என, மத்திய அரசு, கடந்த ஏப்ரல், 15ம் தேதி அறிவித்தது.
மத்திய அரசு பிறப்பித்த இந்த உத்தரவு, நாளை முதல் அமலுக்கு வருகிறது. அனைத்து பாலிசிதாரர்கள், புதிதாக காப்பீடு எடுத்துக் கொள்ள விரும்புவோர், முகவர்கள் உள்ளிட்ட அனைவரும், திங்கள் முதல் வெள்ளி வரை, காப்பீடு தொடர்பான விசாரணைகளுக்கு, நாடு முழுதும் உள்ள, எல்.ஐ.சி., அலுவலகங்களை அணுகலாம்.‘இந்த அலுவலகங்கள், தினசரி காலை, 10 மணி முதல் மாலை, 5:30 மணி வரை செயல்படும்’ என, மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|