பதிவு செய்த நாள்
11 மே2021
19:48
புதுடில்லி:இந்தியாவில் ‘ஆப்பிள்’ நிறுவனத்தின், ‘ஐபோன் 12’ உற்பத்தி சரிவைக் கண்டுள்ளதாக, ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால், உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.குறிப்பாக, ‘பாக்ஸ்கான்’ தொழிற் சாலையில் உற்பத்தி, 50 சதவீதத்துக்கும் மேலாக சரிவை கண்டுள்ளது என தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலையில், இந்தியாவுக்கான ஐபோன் 12 பெருமளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.கொரோனா இரண்டாவது அலையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில், தமிழகமும் ஒன்று. இந்நிலையில், பாக்ஸ்கான் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்; இதனால், மிகக் குறைந்த அளவிலான உற்பத்தியே நடைபெற்று வருகிறது என்றும் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் தான், இந்தியாவில் ஐபோன் 12 அசெம்பிளி துவங்க இருப்பதாக, ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துஇருந்தது.இந்நிலையில், இப்போது கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததை அடுத்து, ஐபோன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|