பதிவு செய்த நாள்
23 மே2021
19:01
இந்திய வீட்டுக்கடன் சந்தையில் மீட்சி ஏற்பட்டு, டிசம்பர் காலாண்டில் 10 சதவீத வளர்ச்சி உண்டாகி இருப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், குறைந்த விலை வீடுகள் பிரிவில் அதிக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பெருந்தொற்று பாதிப்புக்கு மத்தியில், வீட்டுக்கடன் பிரிவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக, ‘சி.ஆர்.ஐ.எப்., மார்க்’ நிறுவனம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. டிசம்பர் காலாண்டில் இந்த பிரிவில், 9.6 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.கடந்த ஆண்டு செப்டம்பர் வரையிலான மூன்று காலாண்டுகளில் வளர்ச்சியில் தேக்கம் நிலவிய பின், டிசம்பர் காலாண்டில் மீட்சி ஏற்பட்டுள்ளது.
வீடுகள் விற்பனையை பொறுத்தவரை, 35 லட்சம் ரூபாய் வரையிலான குறைந்த விலை வீடுகள் அதிக அளவில் நாடப்பட்டுள்ளன. விற்பனையில் 90 சதவீதம் இந்த பிரிவில் அமைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர், வீட்டுக் கடனுக்கான ஈர்ப்பு மிக்க வாடிக்கையாளர்களாக கருதப்படுகின்றனர்.
வீட்டுக் கடன் பிரிவில், பொதுத் துறை வங்கிகள் அதிக சந்தை பங்கை பெற்றுள்ளன.வீட்டுக் கடனை திரும்பிச் செலுத்த முடியாமல் தடுமாறுபவர்கள் எண்ணிக்கையும், அனைத்து வயது பிரிவினர் மத்தியில் அதிகரித்திருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|