பதிவு செய்த நாள்
08 ஜூன்2021
04:41
புதுடில்லி : ‘விஜயா டயக்னாஸ்டிக்’ நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் விண்ணப்பித்துள்ளது.
உடல் பாதிப்புகள் குறித்த பல்வேறு வகையான பரிசோதனைகளை நடத்துவதற்கான இந்த நிறுவனம், நாட்டின், 13 நகரங்களில் செயல்பட்டு வருகிறது.3.5 கோடி பங்குஇதற்கு, 80 பரிசோதனை மையங்களும், 11 பரிசோதனை கூடங்களும் உள்ளன. ஆந்திரா, தெலுங்கானா, டில்லி தலைநகர் பிராந்தியம், கோல்கட்டா ஆகிய மாநிலங்களில் இம்மையங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்த புதிய பங்கு வெளியீட்டின் போது இந்நிறுவனம், அதன் நிறுவனர்கள் வசம் இருக்கும், 3.5 கோடி பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த வகையில் மொத்தம், 35 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன.லாபம் ஈட்டியுள்ளதுகடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த, 2021ம் நிதியாண்டில், இந்நிறுவனம், 84.91 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ், எடெல்வைஸ் பைனான்ஷியல் சர்வீசஸ், கோட்டக் மகிந்திரா கேப்பிட்டல் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|