பதிவு செய்த நாள்
16 ஜூன்2021
22:01
புதுடில்லி:அண்மையில், மின்சார இரு சக்கர வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில், மானிய திட்டமான, ‘பேம் 2’வில் சில மாற்றங்களை அரசு அறிவித்தது. இதையடுத்து, பல நிறுவனங்கள்விலையை குறைத்து அறிவித்து வருகின்றன.
குறிப்பாக, டி.வி.எஸ்.,மோட்டார், ஏத்தர், ஒகினவா, ஆம்பியர் ஆகிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள்,தங்கள் விலையை குறைத்து அறிவித்துள்ளன.டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம், 11 ஆயிரத்து, 250 ரூபாய் அளவுக்கு விலையை குறைத்து அறிவித்துள்ளது.
இதேபோல், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துக்கு சொந்தமான, ஏத்தர் நிறுவனமும், 14 ஆயிரத்து, 500 ரூபாய் குறைத்துள்ளது.கிரீவ்ஸ் காட்டன் நிறுவனத்துக்கு சொந்தமான ஆம்பியர் நிறுவனம், 9 ஆயிரம் ரூபாய் குறைத்துள்ளது. இதேபோல், நாட்டின் மிகப்பெரிய மின் வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, ஒகினவா நிறுவனமும், 17 ஆயிரத்து, 892 ரூபாய் வரை விலை குறைப்பு செய்துள்ளது.பெட்ரோல் விலை அதிகரித்து வரும் நிலையில், இந்த விலை குறைப்பு, மின்சார இருசக்கர வாகன விற்பனையை அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|