பதிவு செய்த நாள்
16 ஜூன்2021
22:56
புதுடில்லி:‘டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்’ நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு, ‘ஸ்பேர் பார்ட்டுகள், இன்ஜின் ஆயில்’ போன்றவற்றை, ‘டோர் டெலிவரி’ செய்யும் வசதியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:கார்களுக்கு தேவையான, இன்ஜின் ஆயில், டயர், பேட்டரி போன்றவற்றை, ஆன்லைன் வாயிலாக ஆர்டர் செய்து, டீலர்களிடமோ அல்லது வீட்டு வாசலிலோ பெறலாம்.இந்த சேவை, முதல் கட்டமாக, 12 நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்னர், இது நாட்டில் உள்ள அனைத்து நகரங்களுக்கும், இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக, மேலும் விரிவுபடுத்தப்படும்.
வாடிக்கையாளர்கள் மற்றும் வாகனங்களின் பாதுகாப்பிற்கு தரமான, ஒரிஜினல் பாகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, அவை அவர்களுக்கு எளிதாக கிடைக்க, இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம். இது, வாடிக்கையாளர்களுக்கு எளிதான மற்றும் மன அழுத்தமில்லாத வாய்ப்பை வழங்குகிறது.இவ்வாறு தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|