பதிவு செய்த நாள்
06 ஜூலை2021
20:30
புதுடில்லி:ஜி.எஸ்.டி., எனும், சரக்கு மற்றும் சேவைகள் வரி வசூல், கடந்த எட்டு மாதங்களுக்குப் பின், முதன் முறையாக, ஜூன் மாதத்தில், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் கீழ் வந்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில், நாட்டின் ஜி.எஸ்.டி., வசூல் 92 ஆயிரத்து, 849 கோடி ரூபாயாக சரிந்துள்ளது. கடந்த பத்து மாதங்களில் இல்லாத அளவு ஜூனில் சரிந்தது.கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், 90 ஆயிரத்து, 917 கோடி ரூபாய் வசூலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூன் மாத மொத்த வசூலில், மத்திய ஜி.எஸ்.டி., வசூல் 16 ஆயிரத்து, 424 கோடி ரூபாயாகும். மாநில ஜி.எஸ்.டி., வசூல் 20 ஆயிரத்து, 397 கோடி ரூபாய்.ஒருங்கிணைந்த வசூல் 49 ஆயிரத்து, 79 கோடி ரூபாயாகவும், கூடுதல் வரி 6,949 கோடி ரூபாயாகவும் உள்ளது என, மத்திய நிதிஅமைச்சகம் தெரிவித்து உள்ளது.
கடந்த எட்டு மாதங்களாக, வசூல், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருந்து வந்த நிலையில், ஜூன் மாதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக கடந்த மே மாதத்தில், 1.02 லட்சம் கோடி ரூபாய் வசூலானது.ஜூன் மாத வரி வசூல் என்பது, மே மாதத்தில் நடைபெற்ற வணிக பரிவர்த்தனைகளுக்கானதாகும்.
கடந்த மே மாதம், கொரோனா தொற்று பரவல் காரணமாக, பல மாநிலங்களில் முழுமையான அல்லது, பகுதியளவிலான ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, வணகச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன. இதன் தொடர்ச்சியாக வரி வசூலிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|