பதிவு செய்த நாள்
06 ஜூலை2021
20:32
புதுடில்லி:பங்குச் சந்தை பிதாமகர் என கருதப்படும், வாரன் பபெட்டின், ‘பெர்க்ஷயர் ஹாத்வே ஹோம் சர்வீசஸ்’ நிறுவனம், இந்தியாவில் கால்பதிக்கிறது. இதற்காக, இந்நிறுவனம், இந்தியாவில், ரியல் எஸ்டேட் தரகு நிறுவனமான, ‘ஓரெண்டா’ உடன் கூட்டு வைக்கிறது.
இதையடுத்து, இந்தியாவில் இந்நிறுவனம்,‘பெர்க்ஷயர் ஹாத்வே ஹோம்சர்வீசஸ் ஓரெண்டா’ என அழைக்கப்படும்.இந்நிறுவனம், இந்தியாவில் மும்பை, டெல்லி, சென்னை, கோல்கட்டா, பெங்களூரு, உள்ளிட்ட முக்கிய நகரங்களில், வீடுகளுக்கான ரியல் எஸ்டெட் சேவைகளை வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரியல் எஸ்டேட் துறை, 2030ல் 75 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தையாக மாறும் என கருதப்படுகிறது.இந்த கூட்டு நிறுவனம், இந்தியாவில், ஆயிரம் ரியல் எஸ்டேட் தொழில் வல்லுனர் குழுவை உருவாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|