பதிவு செய்த நாள்
10 ஜூலை2021
23:06
புதுடில்லி: மகிந்திரா நிறுவனம், அதன் அனைத்து வாகனங்களின் விலையையும் உயர்த்தி அறிவித்துள்ளது. அதிகபட்சமாக, ௧ லட்சம் ரூபாய் வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மகிந்திரா நிறுவனம் நடப்பு ஆண்டில், மூன்றாவது முறையாக விலையை அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மற்றும் மே மாதங்களில் விலை உயர்வை அறிவித்தது. இப்போது மீண்டும் அதிகரித்துள்ளது.நிறுவனத்தின் தயாரிப்புகளில்,‘தார்’ வாகனம், அதிகபட்ச விலை உயர்வை சந்தித்துள்ளது. இந்த காரின் மாடலை பொறுத்து, 42 ஆயிரத்து, 300 ரூபாயிலிருந்து, 1.02 லட்சம் ரூபாய் வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2லிருந்து 7 சதவீதம் வரை விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மகிந்திரா எக்ஸ்.யு.வி., 500 கார்களின் விலை குறைந்த அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2,912 ரூபாயிலிருந்து 3,188 ரூபாய் வரை, மாடலை பொறுத்து இந்த காரின் விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த மாதத்திலிருந்தே, விலை உயர்வு அமலுக்கு வருவதாகவும் மகிந்திரா நிறுவனம் தெரிவித்து உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|