பதிவு செய்த நாள்
15 ஜூலை2021
19:54
மும்பை:மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘சென்செக்ஸ்’, வரலாற்று உச்சத்தை நேற்று எட்டியது. இதேபோல், தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’யும் புதிய உச்சத்தை தொட்டது.
நேற்றைய பங்கு சந்தை வர்த்தகத்தின் முடிவில், சென்செக்ஸ் 0.48 சதவீதம் அதிகரித்து, 53 ஆயிரத்து, 159 புள்ளிகளில் நிலைபெற்றது. இது ஒரு சாதனை அளவாகும். மேலும், சென்செக்ஸ், வர்த்தகத்தின் இடையே 53 ஆயிரத்து, 266 புள்ளிகளை தொட்டதும், ஒரு வரலாற்று சாதனையாகும்.தேசிய பங்குச் சந்தையின், நிப்டியும் வர்த்தகத்தின் முடிவில், புதிய உச்சமான 15 ஆயிரத்து, 924 புள்ளிகளை எட்டியது.
நேற்றை வர்த்தகத்தில், எச்.சி.எல்., டெக் நிறுவனத்தின் பங்குகள் விலை, 5 சதவீதம் அளவுக்கு உயர்ந்து, அதிக லாபமீட்டியது. இதையடுத்து, எல்.அண்டு டி., டெக் மகிந்திரா, எச்.டி.எப்.சி., பேங்க், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவன பங்குகள், அதிக லாபமீட்டின.மாறாக, பார்தி ஏர்டெல், மகிந்திரா அண்டு மகிந்திரா, ஏஷியன் பெயின்ட்ஸ், டைட்டன் ஆகிய நிறுவன பங்குகள் விலை சரிவை கண்டன.
நாட்டில் கொரோனா தொற்று மட்டுப்பட்டு, பொருளாதார செயல்பாடகள் அதிகரித்து வருவதை அடுத்து, இந்திய பங்குச் சந்தைகள் வளர்ச்சியை கண்டுவருகின்றன என, சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|