பதிவு செய்த நாள்
15 ஜூலை2021
19:56
புதுடில்லி:‘கெம்ஸ்பெக் கெமிக்கல்ஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.
இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 700 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த பங்கு வெளியீட்டின் போது, முழுக்க முழுக்க பங்குதாரர்களின் பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளதாகவும், விண்ணப்பத்தில் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்நிறுவனம், நுகர்பொருட்கள் தயாரிப்புக்கு தேவையான ரசாயனங்களை தயாரித்து வருகிறது.
குறிப்பாக, தோல் மற்றும் தலைமுடி ஆகியவற்றை பாதுகாப்பதற்கான பொருட்களுக்கு தேவைப்படும் ரசாயன சேர்க்கைகள், உயர் ரத்த அழுத்தத்துக்கான மருந்துகளுக்கு தேவைப்படும் சேர்க்கைகள் ஆகியவற்றை தயாரித்து வருகிறது. இதன் ஆலை, மஹாராஷ்டிராவில் அமைந்துள்ளது. சிறப்பு வகை ரசாயன தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம், அதன் தயாரிப்புகளை, கிட்டத்தட்ட 43 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
பங்குதாரர்களுக்கு பணப்புழக்கத்தை ஏற்படுத்தவும், பிராண்டு பெயரை வெளிப்படுத்தவும், சந்தைக்கு வருவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ஜே.எம்.பைனான்ஷியல், ஆக்சிஸ் கேப்பிட்டல் ஆகிய நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|