பதிவு செய்த நாள்
16 ஜூலை2021
19:58
புதுடில்லி:முதலீட்டாளர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நிதி தொழில்நுட்ப நிறுவனமான பேடிஎம் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணப்பித்து உள்ளது.
இந்நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 16 ஆயிரத்து 600 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.பேடிஎம் நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு வர இருப்பதாக அண்மைக் காலமாகவே தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டுஇருந்தன. இந்நிலையில் தற்போது செபிக்கு விண்ணப்பித்திருப்பதாக பேடிஎம் தெரிவித்துள்ளது.
இந்த பங்கு வெளியீட்டின் போது இந்நிறுவனம் 8,300 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும்; மீதி 8,300 கோடி ரூபாய்க்கு பங்குதாரர்கள் வசம் இருக்கும் பங்குகளையும் விற்பனைக்கு விடுக்க இருக்கிறது.பேடிஎம் நிறுவனரும் அதன் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான விஜய் சேகர் ஷர்மா சீனாவை சேர்ந்த அலிபாபா குழுமம் ஆகியோரின் வசம் இருக்கும் பங்குகள் இந்த வெளியீட்டின்போது விற்பனை செய்யப்பட உள்ளன.
புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியைக் கொண்டு பேடிஎம் நிறுவனம் அதன் வணிகச் சூழலை வலுப்படுத்திக் கொள்ளவும் கையகப்படுத்துதல் உள்ளிட்ட வணிக மேம்பாட்டுக்கும் பொதுவான நிர்வாக செலவுகளுக்கும் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|