பதிவு செய்த நாள்
20 ஜூலை2021
04:01
புதுடில்லி : ‘எச்.பி., அடெசிவ்ஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.
இந்த பங்கு வெளியீட்டின்போது, 41.40 லட்சம் புதிய பங்குகளையும், நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் 4.57 லட்சம் பங்குகளையும் விற்பனை செய்ய இருப்பதாக விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.இந்த பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை, மூலதன செலவுகளுக்காகவும், விரிவாக்கத்துக்காகவும், பொதுவான நிர்வாக செலவுகளுக்காகவும் பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிறுவனம், பி.வி.சி., சால்வென்ட் சிமென்ட், செயற்கை ரப்பர் பிசின், பி.வி.ஏ., பசைகள், சிலிகான் முத்திரை குத்துவதற்கு பயன்படும் மெழுகு போன்ற ஒரு வகை பசை என பல பொருட்களை உற்பத்தி செய்கிறது.
கொரோனா பாதிப்பு களையும் மீறி, பங்குச் சந்தைகள் நன்றாக செயல்படுவதால், பல நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டுக்காக படையெடுத்து வருகின்றன. இந்நிலையில், சந்தையின் இந்த சாதகமான போக்கை பயன்படுத்தி கொள்ள, இந்நிறுவனமும் திட்டமிட்டுள்ளது.இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ‘யுனிஸ்டோன் கேபிட்டல்’ நிர்வகிக்கிறது. மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை ஆகிய இரண்டிலும், நிறுவனத்தின் பங்குகளை பட்டியலிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|