பதிவு செய்த நாள்
04 ஆக2021
20:32
மும்பை:மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘சென்செக்ஸ்’ நேற்று வரலாற்றில் முதன் முறையாக, 54 ஆயிரம் புள்ளிகளை தாண்டி சாதனை படைத்துள்ளது.
உலக சந்தைகளின் சாதகமான போக்கு மற்றும் நிதி நிறுவன பங்குகளின் விலை அதிகரிப்பு ஆகிய காரணங்களால், சென்செக்ஸ் இந்த சாதனையை படைத்துள்ளது. நேற்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ், 546 புள்ளிகள் அதிகரித்து, 54 ஆயிரத்து 369 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 1.02 சதவீத உயர்வாகும்.
இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’யும் புதிய உச்சம் தொட்டது. நேற்றைய வர்த்தகத்தில், 128 புள்ளிகள் அதிகரித்து, வர்த்தகத்தின் இறுதியில், 16 ஆயிரத்து 246 புள்ளிகளாக உயர்ந்தது.நேற்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் பிரிவில், எச்.டி.எப்.சி., நிறுவன பங்குகள், 5 சதவீதம் அளவுக்கு விலை அதிகரித்தன.
மேலும், கோட்டக் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், எஸ்.பி.ஐ., ஆக்சிஸ் பேங்க் உள்ளிட்ட பங்குகளின் விலையும் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு உயர்ந்தன.மாறாக, டைட்டன், நெஸ்லே இந்தியா, அல்ட்ராடெக் சிமென்ட், சன் பார்மா ஆகிய நிறுவன பங்குகள் விலை சரிவைக் கண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|