சேவைகள் துறை ஏற்றுமதி 28 சதவீத வளர்ச்சி காணும் சேவைகள் துறை ஏற்றுமதி 28 சதவீத வளர்ச்சி காணும் ...  வளர்ச்சி முகத்தில் வேலைவாய்ப்பு வளர்ச்சி முகத்தில் வேலைவாய்ப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
சந்தைகள் வாயிலாக நிதி பொதுத்துறை வங்கிகள் சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2021
20:38

புதுடில்லி:பொதுத்துறை வங்கிகள், கடந்த நிதியாண்டில் மட்டும் 58 ஆயிரத்து 700 கோடி ரூபாய் நிதியை சந்தைகள் வாயிலாக திரட்டி உள்ளன.

கொரோனா பரவலால் பொருளாதார இடையூறுகள் ஏற்பட்டிருந்த போதிலும், பொதுத்துறை வங்கிகள் தங்களுடைய முதலீட்டு நிலையை மேம்படுத்துவதற்காக, கடன் மற்றும் பங்குகளின் கலவையின் மூலம் கடந்த நிதியாண்டில் சந்தைகளில் இருந்து 58 ஆயிரத்து 700 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளன.

மும்பையை அடிப்படையாக கொண்ட, ‘பேங்க் ஆப் பரோடா’ தகுதி வாய்ந்த நிறுவன ஒதுக்கீடு வாயிலாக மட்டும் 4,500 கோடி ரூபாய் திரட்டி உள்ளது. இதேபோல், பஞ்சாப் நேஷனல் பேங்க் 3,788 கோடி ரூபாயையும்; கனரா வங்கி 2 ஆயிரம் கோடி ரூபாயையும் திரட்டி உள்ளன.தகுதி வாய்ந்த நிறுவன ஒதுக்கீடு வாயிலாக தொடர்ந்து முதலீடுகள் பெறப்பட்டிருப்பது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், பொதுத்துறை வங்கிகள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பிரதிபலிப்பதாக உள்ளது.

இவ்வாறு, 12 பொதுத்துறை வங்கிகள், ‘டயர் – 1’ மற்றும் ‘டயர் – 2’ பத்திரங்கள் வாயிலாக மொத்தம் 58 ஆயிரத்து 697 கோடி ரூபாயை திரட்டி உள்ளன. இதற்கு முன், எந்த நிதியாண்டிலும் இவ்வளவு பெரிய தொகை திரட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசு மற்றும் வங்கிகள், வாராக் கடன் விஷயத்தில் எடுத்து வரும் நடவடிக்கைகள், முதலீடுகள் பெருக உறுதுணையாக இருந்துள்ளன.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)