பதிவு செய்த நாள்
07 ஆக2021
20:38
புதுடில்லி:பொதுத்துறை வங்கிகள், கடந்த நிதியாண்டில் மட்டும் 58 ஆயிரத்து 700 கோடி ரூபாய் நிதியை சந்தைகள் வாயிலாக திரட்டி உள்ளன.
கொரோனா பரவலால் பொருளாதார இடையூறுகள் ஏற்பட்டிருந்த போதிலும், பொதுத்துறை வங்கிகள் தங்களுடைய முதலீட்டு நிலையை மேம்படுத்துவதற்காக, கடன் மற்றும் பங்குகளின் கலவையின் மூலம் கடந்த நிதியாண்டில் சந்தைகளில் இருந்து 58 ஆயிரத்து 700 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளன.
மும்பையை அடிப்படையாக கொண்ட, ‘பேங்க் ஆப் பரோடா’ தகுதி வாய்ந்த நிறுவன ஒதுக்கீடு வாயிலாக மட்டும் 4,500 கோடி ரூபாய் திரட்டி உள்ளது. இதேபோல், பஞ்சாப் நேஷனல் பேங்க் 3,788 கோடி ரூபாயையும்; கனரா வங்கி 2 ஆயிரம் கோடி ரூபாயையும் திரட்டி உள்ளன.தகுதி வாய்ந்த நிறுவன ஒதுக்கீடு வாயிலாக தொடர்ந்து முதலீடுகள் பெறப்பட்டிருப்பது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், பொதுத்துறை வங்கிகள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பிரதிபலிப்பதாக உள்ளது.
இவ்வாறு, 12 பொதுத்துறை வங்கிகள், ‘டயர் – 1’ மற்றும் ‘டயர் – 2’ பத்திரங்கள் வாயிலாக மொத்தம் 58 ஆயிரத்து 697 கோடி ரூபாயை திரட்டி உள்ளன. இதற்கு முன், எந்த நிதியாண்டிலும் இவ்வளவு பெரிய தொகை திரட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசு மற்றும் வங்கிகள், வாராக் கடன் விஷயத்தில் எடுத்து வரும் நடவடிக்கைகள், முதலீடுகள் பெருக உறுதுணையாக இருந்துள்ளன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|