பதிவு செய்த நாள்
08 ஆக2021
18:59
நிறுவனங்கள் பணிக்கு அமர்த்திக் கொள்வது ஜூலை மாதத்தில் 11 சதவீதம் அதிகரித்துள்ளது, பொருளாதார மீட்சிக்கான அறிகுறியாக அமைந்துள்ளதாக புள்ளி விபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
வேலைவாய்ப்பு இணையதளமான நவ்கரி.காம் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள், ஜூலை மாதத்தில் வேலைவாய்ப்பு பதிவுகள் தொடர் வரிசை முறையில், 11 சதவீதம் அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கிறது. மேலும் ஏப்ரல், மே மாதங்களில் வேலைவாய்ப்பு பதிவுகள் குறைந்த நிலையில், ஜூன் மற்றும் ஜூலை ஆகிய மாதங்களில் தொடர்ந்து வேலைவாய்ப்பு பதிவுகள் உயர்ந்துள்ளன. டிஜிட்டல் மயமாக்கல் இதற்கு முக்கியகாரணமாககருதப்படுகிறது.
தகவல் தொழில்நுட்ப துறை தவிர, நுகர்வோர் துறை, நிதிச் சேவைகள் மற்றும் கல்வித் துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. ரியல் எஸ்டேட், ஓட்டல் உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது.இந்த தொழில் துறையில் டிஜிட்டல்மயமாக்கல் அரங்கேறுவது மற்றும் பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகளாக இந்த புள்ளி விபரங்கள் அமைந்து இருப்பதாக கருதப்படுகிறது.
பெங்களூரு, புனே மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் வேலைவாய்ப்பு இரு இலக்கமாக அதிகரித்துள்ளது. டில்லி, மும்பை, கோல்கட்டா மற்றும் சென்னை ஆகிய நகரங்களிலும் வேலைவாய்ப்பு வளர்ச்சி கண்டு உள்ளது. கோவை, ஜெய்ப்பூர் போன்ற நகரங்களிலும் வேலைவாய்ப்பு வளர்ச்சி கண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|