வளர்ச்சி முகத்தில் வேலைவாய்ப்பு வளர்ச்சி முகத்தில் வேலைவாய்ப்பு ... ஆயிரம் சந்தேகங்கள் ஆயிரம் சந்தேகங்கள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வைப்பு நிதி முதலீட்டிற்கு பொருத்தமான உத்தி எது?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2021
19:02

வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளதாக கருதப்படும் நிலையில், வைப்பு நிதி முதலீட்டாளர்கள் பின்பற்ற வேண்டிய அணுகுமுறை பற்றி ஒரு அலசல்.ரெப்போ விகிதம் மாற்றமில்லாமல் தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட முடிவாகவே பார்க்கப்படுகிறது.


கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் முதல், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மாற்றாமல் இருக்கிறது. வங்கிகளுக்கு வழங்கப்படும் கடனுக்கான இந்த விகிதம் தற்போது 4 சதவீதமாக இருக்கிறது. கடந்த 2001ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பின் நிலவும் குறைந்த ரெப்போ விகிதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


வட்டி விகிதம் உயருமா?


குறைந்த வட்டி விகித போக்கால், வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வைப்பு நிதிக்கு குறைவான வட்டி விகிதத்தை வழங்கி வரும் நிலையில், சராசரி முதலீட்டாளர்கள் வட்டி விகிதம் உயரும் வாய்ப்பை எதிர்நோக்கியிருந்தனர். இந்நிலையில், வரும் மாதங்களில் வட்டி விகிதம் உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக நிதி வல்லுனர்கள் கருதுகின்றனர். ரெப்போ விகிதம் அண்மை காலத்தில் உயர்த்தப்படவில்லை என்றாலும், இடைப்பட்ட காலத்தில் ரொக்க கையிருப்பு விகிதத்தை இரண்டு முறை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.


பொதுவாக ரொக்க கையிருப்பு விகிதம் உயர்த்தப்படுவது, அமைப்பில் உள்ள பணப் புழக்கத்தை உறிஞ்சி, வட்டி விகிதம் உயர வழி செய்யும் என்று கருதப்படுகிறது. மேலும், ஒரு சில வங்கிகள், குறிப்பிட்ட கால அளவிற்கான வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்த துவங்கியுள்ளன. எனவே, வரும் மாதங்களில் வட்டி விகிதம் உயரும் சூழல் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


குறுகிய கால முதலீடு


வட்டி விகிதம் மிகவும் குறைந்து, பின் மீண்டும் உயரத் துவங்கும் போது, முதலில் குறைந்த மற்றும் நடுத்தர கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதமே உயரத் துவங்கும் என கருதப்படுகிறது.


எனவே, தற்போது முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளவர்கள், நீண்ட கால அளவை நாடாமல், குறுகிய கால அளவை தேர்வு செய்வது பொருத்தமாக இருக்கும்.அதே போல, வைப்பு நிதி முதலீடு முதிரும் நிலையில் இருப்பவர்கள் அந்த தொகையை விலக்கிக் கொண்டு, மீண்டும் முதலீடு செய்யும் போது குறுகிய கால அளவில் முதலீடு செய்வது ஏற்றதாக இருக்கும். இவ்வாறு செய்வதன் மூலம், பின்னர் வைப்பு நிதி முதிர்வடையும் போது, அதிக வட்டி விகிதத்தில் முதலீடு செய்து பலன் பெறலாம்.


மேலும் பெரிய தொகையாக இருந்தால், அதை பகுதி பகுதியாக பிரித்து, ஒன்று முதல் ஐந்தாண்டு வரையிலான கால அளவில் முதலீடு செய்யலாம். இதன் மூலம், குறைவான கால தொகை முதிர்வடையும் போது, அப்போதைய வட்டி விகிதத்தில் முதலீடு செய்து பலன் பெறலாம்.இது தவிர, மாறும் வட்டி விகித வைப்பு நிதி மற்றும் மாறும் வட்டி விகித பத்திரங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பையும் பரிசீலிக்கலாம் என்கின்றனர்.


ஒரு சில வங்கிகள், தற்போது மாறும் வட்டி விகித வைப்பு நிதி வசதியை அளிக்கின்றன. ஏழு ஆண்டு முதிர்வு காலம் கொண்டதாக மாறும் விகித பத்திரங்களை பொறுத்தவரை, தற்போது 7.15 சதவீத பலன் அளிக்கின்றன.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)