பதிவு செய்த நாள்
10 ஆக2021
19:11
புதுடில்லி:தொலைதொடர்பு துறைக்கு, அரசின் நீடித்த ஆதரவு தேவை என்றும்; நியாயமான வருவாயை ஈட்ட அனுமதிக்க வேண்டும் என்றும், ‘பார்தி ஏர்டெல்’ நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் கேட்டுக் கொண்டுள்ளார்
நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்தத் துறையானது, முதலீடுகளுக்கு ஏற்ற ஒரு துறையாக தொடர்ந்து இருப்பதை, அரசாங்கமும், கட்டுப்பாட்டு அமைப்புகளும் உறுதி செய்ய முன்வரும் என தனக்கு நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இத்துறையில் மூன்று தனியார் நிறுவனங்கள், ஒரு பொதுத்துறை நிறுவனம் என, 3+1 கட்டமைப்பை பராமரிக்க, அரசின் நீடித்த ஆதரவு தேவை என்றும் குறிப்பிட்டு உள்ளார்.“பொருளாதாரத்தில் இத்துறையின் பங்கு அதிகரித்து வருவதால், சவால்களும் அதிகரித்து வருகின்றன. அதனால், இத்துறை சார்ந்த நிறுவனங்கள், அவற்றின் முதலீட்டுக்கு ஏற்ற நியாயமான வருவாயை ஈட்ட அனுமதிக்க வேண்டும்” என்றும் சுனில் மிட்டல் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், இந்திய பொருளாதாரம் டிஜிட்டல் மயமாகி வருவதை அடுத்து, தரவுகளுக்கான சேமிப்பு மையங்கள், கிளவுடு சேவைகள், இணைய பாதுகாப்பு ஆகியவற்றில் அதிக வாய்ப்புகள் இருப்பதால், அவற்றிலும் முதலீட்டை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|