ஆர்.ஐ.என்.எல்., நிறுவனத்தை வாங்க ‘டாடா ஸ்டீல்’ ஆர்வம் ஆர்.ஐ.என்.எல்., நிறுவனத்தை வாங்க ‘டாடா ஸ்டீல்’ ஆர்வம் ...  வளர்ச்சி கணிப்பை உயர்த்தியது ‘இந்தியா ரேட்டிங்ஸ்’ நிறுவனம் வளர்ச்சி கணிப்பை உயர்த்தியது ‘இந்தியா ரேட்டிங்ஸ்’ நிறுவனம் ...
ஆனந்த் மகிந்திராவின் ‘கலக்கல்’ பகிர்வுகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2021
20:11

புதுடில்லி:பிரபல தொழிலதிபரும், ‘மகிந்திரா’ குழுமத்தின் தலைவருமான ஆனந்த் மகிந்திரா, டுவிட்டரில்தொடர்ந்து சுவாரசியமான தகவல்கள், ‘வீடியோ’க்களை பகிர்ந்து கொள்வது வாடிக்கையான ஒன்று. இதற்காகவே டுவிட்டரில் இவரை ‘பாலோ’ செய்பவர்கள் பலர்.

தற்போது இவர் புதிதாக ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், ஒருவர் மிக வேகமாக தோசைகளை சுடும் காட்சி இடம்பெற்றுள்ளது.இந்த வீடியோவை பகிர்ந்து, ‘இந்த மனிதர் மிகச் சிறந்த திறமை கொண்டவராக இருக்கிறார். சோம்பேறிகளுடன் ஒப்பிடும்போது, இவர் ‘ரோபோ’வாக தோன்றுகிறார்’ என பாராட்டி தள்ளியுள்ளார்.மேலும், ‘அவர் செய்யும் வேலையை பார்த்தே நான் சோர்வாகிவிட்டேன்; கூடவே பசியும் எடுத்துவிட்டது’ என்றும் புகழ்ந்துள்ளார்.

இதையடுத்து, இந்த பகிர்வு ஆயிரக்கணக்கில் ‘லைக்’குகளை அள்ளியுள்ளது. பலர் இதை மற்றவர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர்.கடந்த வாரம் இதே போல ஒருவர், தன்னுடைய மிஷினை பயன்படுத்தி, இளநீர் விற்பதை பகிர்ந்திருந்தார்.‘‘நான் இந்த முயற்சியை பாராட்டும் வகையில் வெளியிட்டேன்.‘‘உடனே பலர், பாரம்பரிய விற்பனையாளர்கள் இதைவிட வேகமாக, சுத்தமாக, அரிவாளைக் கொண்டே வழங்கி விடுவர். மேலும், அவர்கள் பிளாஸ்டிக் கோப்பைகளை பயன்படுத்துவதில்லை என பின்னுாட்டம் இடுகின்றனர்.

‘‘கண்டுபிடிப்பாளர்களையும், விற்பனையாளர்களையும் என்னுடைய இந்த பதிவுகள் உற்சாகம் ஊட்டும் என்ற நம்பிக்கையில் தான் இவற்றை பகிர்கிறேன்,’’ என, ஆனந்த் மகிந்திரா தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)