பதிவு செய்த நாள்
19 ஆக2021
19:52
புதுடில்லி:நாட்டின் பொருளாதாரம் வேகமாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது என, ‘ஆதித்ய பிர்லா’ குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார்.
‘அல்ட்ராடெக்’ நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தை முன்னிட்டு, காணொலி வாயிலாக பங்குதாரர்களிடம் உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:கொரோனா குறித்த நிச்சயமற்ற நிலை இன்னும் நீடித்து வந்தாலும், நாட்டின் பொருளாதாரம் வேகமாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டு இருக்கிறது.
தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதால், மூன்றாவது அலையை எதிர்ப்பதற்கான நிலையை அது மேம்படுத்துவதாக இருக்கிறது.மேலும் அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பொருளாதார குறியீடுகள் வளர்ச்சியை காட்டுவதாக அமைந்துஉள்ளன.
நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள், தொற்றுநோய் தொடர்பான நிச்சயமற்ற தன்மைக்கு ஏற்ப, பணி செய்யும் முறையில் பல மாற்றங்களை மேற்கொண்டுள்ளன. அவை ‘டிஜிட்டல்’ மயமாகி வருகின்றன.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|