பதிவு செய்த நாள்
01 செப்2021
20:23
புதுடில்லி:நாட்டின் எரிபொருள் தேவை தொடர்ந்து மீட்சி அடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக, பெட்ரோல் தேவை வேகமாக மீட்சி கண்டு வருகிறது.
இருப்பினும், டீசல் தேவை, கொரோனாவுக்கு முந்தைய நிலையை விட தொடர்ந்து குறைந்தே இருந்து வருகிறது.கடந்த ஆகஸ்டில், பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள், 24.3 லட்சம் டன் பெட்ரோலை விற்பனை செய்துள்ளன.இது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத விற்பனையை விட, 13.6 சதவீதம் அதிகமாகும். மேலும், கொரோனாவுக்கு முந்தைய 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை விட, 4.1 சதவீதம் அதிகமாகும்.
டீசலை பொறுத்தவரை, கடந்த ஆண்டு ஆகஸ்டை விட, 15.9 சதவீதம் அதிகரித்து உள்ளது. இருப்பினும், கொரோனாவுக்கு முந்தைய 2019 ஆகஸ்டை விட, 9.8 சதவீதம் குறைவாகும். மேலும், கடந்த ஜூலையை விட 9.3 சதவீதம் குறைவாகும்.டீசல் விற்பனையானது, வரும் பண்டிகை காலத்தில் அதிகரித்து, நவம்பரில் பழைய நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|