தயாரிப்பு துறை உற்பத்தி சற்று வேகம் குறைந்தது தயாரிப்பு துறை உற்பத்தி சற்று வேகம் குறைந்தது ...  பொருளாதாரம் மீட்சி அடைந்தாலும் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு பொருளாதாரம் மீட்சி அடைந்தாலும் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு ...
ஸ்பாட்டன் நிறுவனத்தைக் கைப்பற்றிய டெல்லிவெரி லாஜிஸ்டிக்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2021
20:09

இந்தியாவின் முன்னணி எண்ட்-டு-எண்ட் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் விநியோகச் சங்கிலி சேவை நிறுவனமான டெல்லிவெரி, பெங்களூரை மையமாக் கொண்ட ஸ்பாட்டன் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் பி2பி திறன்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது டெல்லிவெரி.

இதுகுறித்து, டெல்லிவெரி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாஹில் பாருவா பேசும்போது, “ கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக டெல்லிவெரி ஆனது பி 2 சி லாஜிஸ்டிக்ஸ் பணியை மேற்கொண்டுவருகிறது. தற்பொழுது, இதில் ஒரு முன்னணி நிலையை நிலைநாட்டியுள்ளது. மேலும், எங்கள் பகுதி டிரக்லோட் வியாபாரத்தை ஸ்பாட்டனுடன் இணைப்பதன் மூலம் நாங்கள் பி 2 பி எக்ஸ்பிரஸிலும் முன்னிலை நிலைக்குச் செல்வோம் என்பதில் மாற்றமில்லை. மிக முக்கியமாக, எங்கள் பி 2 சி மற்றும் பி 2 பி எக்ஸ்பிரஸ் வணிகங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு நன்மைகளை டெல்லிவெரி மற்றும் ஸ்பாட்டன் என இரண்டு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கும் வழங்குவதில் நாங்கள் பெருமைக் கொள்கிறோம். மேலும் எண்ட்-டு-எண்ட் சப்ளை சங்கிலித் திறன்களை மேலும் மேம்படுத்துவதில் மகிழ்ச்சிக் கொள்கிறோம்” என்றார்.

ஸ்பாட்டன் லாஜிஸ்டிக்ஸ் நிர்வாக இயக்குனர் அபிக் மித்ரா கூறுகையில், "டெல்லிவெரியின் வளர்ச்சி மற்றும் மதிப்பு உருவாக்கத்தின் பயணத்தில் ஒரு பகுதியாக நானும் , ஸ்பாட்டன் குழுவும் இடம் பெறுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவில் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் விநியோகச் சங்கிலி சேவை நிறுவனமாக ஒரு முன்னணி முடிவை உருவாக்கும் பணியில் டெல்லிவெரி அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஸ்பாட்டன் ஆனது வாடிக்கையாளர்களின் உறவுகள் மற்றும் சேவை தரம், தொழில்முறை மேலாண்மை மற்றும் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. அந்த நன்மைகள் தற்பொழுது டெல்லிவெரி நிறுவனத்துடன் பகிரப்படுகிறது. இரண்டு நிறுவனங்களும் இணைவதால் இந்தியாவின் முன்னணி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களில் ஒன்றாக இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை” என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)