பதிவு செய்த நாள்
05 செப்2021
19:17
இந்தியர்களில் பெரும்பாலானோர் அலுவலகத்திற்கு நேரில் வந்து பணிபுரிவதை விரும்பினாலும், இல்லத்தில் இருந்து பணியாற்றுவது, அலுவலக பணி வாய்ப்பு இரண்டும் கலந்த வாய்ப்பை விரும்புவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கொரோனா பாதிப்பு அலுவலக பணி, கலாசாரத்தின் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள், தங்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற ஊக்குவித்து வருகின்றன.
இந்த பின்னணியில், ஜே.எல்.எல்., நிறுவனம் நடத்திய பணியிட தேர்வு தொடர்பான ஆய்வில் பங்கேற்றவர்களில், 75 சதவீதம் பேர், வாரம் ஒரு முறை அலுவலகம் வந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் 79 சதவீதம் பேர், வாரம் ஒரு முறையேனும் வீட்டில் இருந்து பணியாற்றும் வாய்ப்பை விரும்பியுள்ளனர்.
வீட்டில் இருந்தே பணியாற்றும் சூழலில், 41 சதவீதம் பேர், அலுவலகத்தில் நண்பர்களுடன் உரையாடும் வாய்ப்பை விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.பெரும்பாலான இந்தியர்கள், பணியிட தேர்வில் வளைந்து கொடுக்கக்கூடிய வாய்ப்பை விரும்புவதாக கூறியுள்ளனர். வாரத்தில் மூன்று நாள் வீட்டில் இருந்தே பணியாற்றுவது மற்றும் இரண்டு நாள் அலுவலகம் வந்து பணியாற்றுவது ஏற்றதாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|