இந்தியாவின் முதல் கிளவுட் கேமிங் சோதனையை 5ஜி நெட்வொர்க்கில் வழங்கும் ஏர்டெல்இந்தியாவின் முதல் கிளவுட் கேமிங் சோதனையை 5ஜி நெட்வொர்க்கில் வழங்கும் ... ...  செயற்கை ஜவுளி துறைக்கு  ஊக்கச் சலுகை திட்டம்? செயற்கை ஜவுளி துறைக்கு ஊக்கச் சலுகை திட்டம்? ...
ரூ.7,900 கோடி தந்தால் வழக்கு வாபஸ்: கெய்ர்ன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2021
19:40

புதுடில்லி:மத்திய அரசு, 7ஆயிரத்து 900 கோடி ரூபாய் தந்தால், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில், இந்திய சொத்துக்களை முடக்குவது தொடர்பான வழக்குகளை வாபஸ் வாங்குவதாக, ‘கெய்ர்ன் எனர்ஜி’ நிறுவனம் அறிவித்து உள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த, கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம், மூலதன வரி செலுத்த தவறியதாக கூறி, 7 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள், டிவிடெண்டு உள்ளிட்டவற்றை, வருமான வரித் துறை முடக்கியது.

இதை எதிர்த்து, கெய்ர்ன் எனர்ஜி சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, சாதகமான தீர்ப்பைப் பெற்றது. அத்துடன், நிலுவைத் தொகைக்காக, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், இந்திய சொத்துக்களை முடக்க, கெய்ர்ன் எனர்ஜி வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், கடந்த மாதம் இந்த பிரச்னைக்கு காரணமான முன்தேதியிட்ட வருமான வரி வசூல் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்தது.அத்துடன், கெய்ர்ன் உள்ளிட்ட நிறுவனங்களிடம் வசூலித்த 8,100 கோடி ரூபாயை திரும்பத் தரும் விதிமுறைகளுடன், புதிய சட்ட திருத்தத்தை அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில், கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சைபன் தாம்சன் கூறும்போது, ‘‘நிறுவனத்திடம் பிடித்தம் செய்த, 7 ஆயிரத்து, 900 கோடி ரூபாயை திரும்பத் தந்த ஓரிரு நாட்களில், மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்த அனைத்து வழக்குகளையும் வாபஸ் வாங்கி விடுவோம்,’’ என, தெரிவித்துள்ளார். இதனால், விரைவில் இப்பிரச்னை முடிவுக்கு வரும் என, தெரிகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)