செயற்கை ஜவுளி துறைக்கு  ஊக்கச் சலுகை திட்டம்? செயற்கை ஜவுளி துறைக்கு ஊக்கச் சலுகை திட்டம்? ...  சீன ‘வைட்டமின் – சி’ மீது பொருள் குவிப்பு வரி சீன ‘வைட்டமின் – சி’ மீது பொருள் குவிப்பு வரி ...
1,349 நிறுவன சொத்து விற்பனை: இந்திய திவால் வாரியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2021
19:48

புதுடில்லி:கடந்த, ஜூன் நிலவரப்படி, திவால் சட்டத்தின் கீழ், 1,349 நிறுவனங்களின் சொத்துக்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இந்திய திவால் வாரியம் தெரிவித்துள்ளது.

திவால் சட்டத்தின் கீழ், வங்கிக் கடனை திரும்பத் தராத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன்படி, நலிவில் இருந்து மீளும் வாய்ப்புள்ள நிறுவனங்களாக இருக்கும் பட்சத்தில் அவற்றின் கடன்கள் மறுசீரமைக்கப்பட்டு, நிர்வாக உரிமம் கைமாற்றப்படுகிறது. அவ்வாறின்றி, மீட்சி காண வாய்ப்பற்ற நிறுவனங்களின் சொத்துகளை விற்பனை செய்து கடன் வசூலிக்கப்படுகிறது.

இந்த வகையில், புதிய திவால் சட்டம் அறிமுகமான ஐந்து ஆண்டுகளில் 4,541 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவற்றில், கடந்த ஜூன் நிலவரப்படி 2,859 நிறுவனங்கள் மீதான நடவடிக்கை முடிவடைந்துள்ளது.1,349 நிறுவனங்களின் சொத்துகளை விற்பனை செய்து, கடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 396 நிறுவனங்களின் கடன் மறுசீரமைப்பு பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திவால் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாகவே, பெரும்பாலான நிறுவனங்களின் சொத்து மதிப்பு அடியோடு குறைந்துள்ளது. நிலுவையில் உள்ள கடனில், சராசரியாக 7 சதவீத அளவிற்கே, திவால் நிறுவனங்களின் சொத்துக்கள் உள்ளதாக, இந்திய திவால் வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் நிலவரப்படி, திவால் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட கடன் நிலுவையில், 36 சதவீத அளவிற்கே, நிதி நிறுவனங்களுக்கு திரும்பக் கிடைத்துள்ளது. அதில், 1 கோடி ரூபாய்க்கும் குறைவான வாராக் கடன் 80 சதவீதமாக உள்ளது.

இதுபோல, குறைந்த கடனுக்காக திவால் நடவடிக்கை எடுப்பதில் நிதி நிறுவனங்களுக்கு ஆர்வம் குறைந்து வருகிறது.அதிக வாராக் கடன் உள்ள நிறுவனங்கள் மீது, திவால் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவே, நிதி நிறுவனங்கள் விரும்புவதாக, புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)