தென் ஆப்ரிக்காவில் டி.வி.எஸ்., மோட்டார் தென் ஆப்ரிக்காவில் டி.வி.எஸ்., மோட்டார் ...  மீண்டும் வருகிறது எல்.எம்.எல்., மீண்டும் வருகிறது எல்.எம்.எல்., ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
கார் தொழிற்சாலைகளை மூட போர்டு திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2021
21:33

புதுடில்லி:இந்தியாவில் கார் தயாரிப்பு தொழிற்சாலைகளை மூடுவதற்கு போர்டு நிறுவனம் திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த, போர்டு நிறுவனம், 15ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் இந்தியாவில் கார் தயாரிப்பை துவக்கியது.சென்னை மற்றும் குஜராத்தின் சனந்த் நகரில் தொழிற்சாலைகளை நிறுவி, ‘பிகோ, எகோஸ்போர்ட்,ஆஸ்பயர்’ உள்ளிட்ட வாகனங்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில், கடுமையான போட்டி காரணமாக போர்டு இழப்பை சந்தித்தது.

இதையடுத்து, போர்டு நிறுவனத்தின் பெரும்பான்மை பங்கை வாங்க மஹிந்திரா நிறுவனம் முன்வந்தது. இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட உள்ளதாக, இரு ஆண்டுகளுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டன. ஆனால், இந்தாண்டு துவக்கத்தில், இத்திட்டத்தில் இருந்து விலகுவதாக, மஹிந்திரா அறிவித்தது.

இதைத் தொடர்ந்து, போர்டு நிறுவனம், அதன் இரு தயாரிப்பு தொழிற்சாலைகளை மூட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதேசமயம் ‘மஸ்டாங்’ உள்ளிட்ட கார்களை இறக்குமதி செய்து விற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)