பதிவு செய்த நாள்
30 செப்2021
20:49
புதுடில்லி:கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், வீடுகள் விற்பனை, முக்கியமான ஏழு நகரங்களில் இருமடங்கு அதிகரித்திருப்பதாக, சொத்து ஆலோசனை நிறுவனமான ‘அனராக்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்து உள்ளதாவது:நாட்டில் உள்ள முக்கியமான ஏழு நகரங்களில், மதிப்பீட்டு காலத்தில் 62 ஆயிரத்து, 800 வீடுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. மேலும், வீடுகளின் சராசரி விலையும் 3 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 29 ஆயிரத்து, 520 வீடுகள் விற்பனை ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தகவல் தொழில்நுட்ப துறையில் நபர்களை பணியில் அமர்த்துவது அதிகரித்துள்ளது, வீட்டுக் கடனுக்கான வட்டி குறைந்துள்ளது மற்றும் தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் வீடுகள் விற்பனை அதிகரித்து உள்ளது.அலுவலகங்கள் திறக்கப்பட்டாலும், பெரும்பாலான நாட்கள் வீடுகளிலிருந்து பணிபுரிவது தொடர்வதாலும் தேவை அதிகரித்து வருகிறது.
சென்னையை பொறுத்தவரை, வீடுகள் விற்பனை இரு மடங்கு அதிகரித்து உள்ளது. இவ்வாறு அனராக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|