பதிவு செய்த நாள்
02 அக்2021
00:48
புதுடில்லி:நாட்டின் ஜி.எஸ்.டி., வசூல், செப்டம்பர் மாதத்தில், கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்து, 1.17லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.மேலும், தொடர்ந்து மூன்று மாதங்களாக ஜி.எஸ்.டி., வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது.
கடந்த ஆண்டு இதே செப்டம்பர் மாதத்தில், வசூல் 95 ஆயிரத்து, 480 கோடி ரூபாயாக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டு செப்டம்பரில் 91 ஆயிரத்து, 916 கோடி ரூபாயாக இருந்தது.கடந்த ஏப்ரல் மாதத்தில் வசூல் மிகவும் அதிகரித்து, 1.41 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அதன் பின் வந்த 5 மாதங்களில், செப்டம்பரில் தான் அதிகளவில் வசூல் ஆகி உள்ளது.
இதற்கு முந்தைய ஆகஸ்ட் மற்றும் ஜூலை மாதங்களில் வசூல், முறையே, 1.2 லட்சம் கோடி மற்றும் 1.16 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.கடந்த செப்டம்பரில் வசூலான தொகையில், மத்திய ஜி.எஸ்.டி., 20 ஆயிரத்து, 578 கோடி ரூபாயாகவும்; மாநில ஜி.எஸ்.டி., 26 ஆயிரத்து, 767 கோடி ரூபாயாகவும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., வசூல் 60 ஆயிரத்து, 911 கோடி ரூபாயாகவும் உள்ளது.கூடுதல் வரியாக 8,754 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|