பதிவு செய்த நாள்
02 அக்2021
00:50
புதுடில்லி:விருந்தோம்பல் துறையைச் சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.
கடந்த சில வாரங்களாகவே, இந்நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டுக்கு வர இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது இந்நிறுவனம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது.ஓயோவின் தாய் நிறுவனமான ‘ஓரவெல் ஸ்டேஸ்’ பங்குதாரர்கள், ஓயோ புதிய பங்குகள் வெளியீட்டுக்கு வர கடந்த வாரம் அனுமதி வழங்கியதை அடுத்து, தற்போது விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.
ஓயோ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 8,430 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளதாக, விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.பங்கு வெளியீட்டின்போது, 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும்; 1,430 கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.திரட்டப்படும் நிதியை கடன்களை அடைக்கவும், வளர்ச்சிக்கான முயற்சிகளுக்கும், பொதுவான நிர்வாக செலவுகளுக்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|