பதிவு செய்த நாள்
02 அக்2021
19:45
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி கடந்த செப்டம்பர் மாதத்தில் 21.35 சதவீதம் அதிகரித்து, 2.47 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொறியியல் பொருட்கள், பெட்ரோலிய பொருட்கள் போன்ற முக்கியமான பிரிவுகளின் சிறந்த செயல்பாடுகள் காரணமாக ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியை போலவே, கடந்த செப்டம்பரில் இறக்குமதியும் அதிகரித்துள்ளது. மதிப்பீட்டு காலத்தில் இறக்குமதி 84.75 சதவீதம் அதிகரித்து, 4.17 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதையடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, செப்டம்பர் மாதத்தில் 1.7 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில், கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 5.83 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெட்ரோலிய பொருட்கள், பொறியியல் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி செப்டம்பரில் அதிகரித்திருந்த போதிலும், மருந்து துறையில் 8.47 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|