பதிவு செய்த நாள்
19 அக்2021
19:40
புதுடில்லி:ஆன்லைன் இன்சூரன்ஸ் சேவைகளை வழங்கும் ‘பாலிஸி பஜார்’ நிறுவனத்தின் தாய் நிறுவனமான ‘பி.பி., பின்டெக்’ ஐ.பி.ஓ., எனும் புதிய பங்கு வெளியீட்டுக்கு வர, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது.
பி.பி., பின்டெக் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 6,017 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக, இந்நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் செபிக்கு விண்ணப்பித்திருந்தது. பரிசீலனைக்கு பின், தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்த பங்கு வெளியீட்டின் போது 3,750 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளும்; 2,268 கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்களின் பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளன.
பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை கொண்டு, நிறுவனத்தின் பிராண்டுகளை மேலும் பிரபலப்படுத்தவும், விரிவாக்கம் மற்றும் புதிய வாய்ப்புகளுக்கும், வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், திரட்டப்படும் நிதியை இந்தியாவுக்கு வெளியே நிறுவனங்களை கையகப்படுத்தவும், பொதுவான நிர்வாகச் செலவுகளுக்கும் பயன்படுத்திக் கொள்ள இருக்கிறது.
இந்நிறுவனம் காப்பீடு, கடன், நிதி தயாரிப்புகள் ஆகியவற்றை எளிதாக அணுகும் சேவையை வழங்கி வருகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|