பதிவு செய்த நாள்
20 அக்2021
21:15
புதுடில்லி:அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து அமலாகும் புதிய விதிகள் குறித்து, இந்தியாவிலுள்ள வங்கிகள் தங்கள் கவலையை தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில், அந்நாட்டின் திருத்தப்பட்ட தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டத்தின் கீழ், அமெரிக்க அரசிடம் அங்கிருக்கும் வங்கி வாடிக்கையாளர்கள் குறித்த விபரங்களை, கட்டாயமாக பகிர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, மத்திய அரசிடம் இந்திய வங்கிகள் தங்களுடைய கவலையை தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளன.
இது குறித்து உயரதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது:அமெரிக்காவின் புதிய விதி, வங்கிகளுக்கு நிச்சயமாக சில சிரமங்களை ஏற்படுத்தும். அனைத்து வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்களை, அந்நாட்டின் அரசுக்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.எனவே இது குறித்து மத்திய அரசு தலையிட்டு வழிகாட்ட வேண்டும் என, இந்திய வங்கிகள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடு காரணமாக, அமெரிக்காவில் வங்கிகளுக்கு அதிக செலவாகும். கூடுதலாக ஆட்களை நியமிக்க வேண்டியதிருக்கும்.மேலும், விதிமுறைகளை நிறைவேற்றுவதில் குறைபாடு ஏற்பட்டால், அது கடுமையான தாக்கங்களை உருவாக்கும். விசாரணைக்காக எந்த வாடிக்கையாளருடைய தகவல் அமெரிக்காவுக்கு தேவைப்படுகிறதோ, அதை மட்டும் கொடுப்பது என்பது தான் பொருத்த மானதாக இருக்கும். இந்திய வங்கிகளின் இந்த கவலை குறித்து ஏற்கனவே ரிசர்வ் வங்கியிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|