பதிவு செய்த நாள்
21 அக்2021
20:40
புதுடில்லி:உலக பெரும்பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தலைமையிலான, மின்சார வாகனங்களை தயாரிக்கும் ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தி யாவில் இறக்குமதி வரியை குறைக்குமாறு, பிரதமர் அலுவலகத்துக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது.அத்துடன் இது குறித்து எலான் மஸ்க், பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு வழங்குமாறும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
டெஸ்லா நிறுவனம், இந்திய சந்தையில் நுழைவதற்கு முன்பாகவே, மின்சார கார்களுக்கான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என கோரி வருகிறது. இந் நிறுவனம் முதல்கட்டமாக கார்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து, விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே, இறக்குமதி வரியை குறைக்க கூடாது என, உள்நாட்டு தயாரிப்பாளர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.இது உள்நாட்டு தயாரிப்புகளுக்கு பாதகமாக இருக்கும் எனக் கூறி எதிர்க்கப்படுகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|