பதிவு செய்த நாள்
21 அக்2021
20:42
புதுடில்லி:‘ஆட்டோ டெபிட்’ முறையில், புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்து, அது நடைமுறைக்கு வந்து விட்ட போதிலும், இன்னும் சில வங்கிகள் அதை முறையாக செயல்படுத்தாமல் உள்ளன என குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
சேவை மற்றும் பொருட்களை வழங்கும் நிறுவனங்கள், அவற்றுக்கான கட்டணத்தை, ஆட்டோ டெபிட் முறையில் வாடிக்கையாளர்களிடம் வசூலித்து வந்தன.இம்முறையில் வாடிக்கையாளர்கள் சில சிக்கல்களை சந்தித்ததை அடுத்து, ரிசர்வ் வங்கி இதில் சில விதிமுறைகளை அறிவித்தது.இதையடுத்து, 5 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்டு ஆட்டோ டெபிட் செய்யப்படும் பட்சத்தில், வாடிக்கையாளர்களிடம் குறுஞ்செய்தி மற்றும் ஒரு முறை கடவு எண் வாயிலாக அனுமதி பெற்றே பணத்தை எடுக்க இயலும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நடைமுறை அக்டோபர் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வந்துவிட்டது. ஆனாலும் மூன்று வாரங்கள் கடந்த நிலையில், இன்னும் வணிகங்கள் மற்றும் வங்கிகள் தரப்பில் நடைமுறை சிக்கல்கள் தீர்க்கப்படாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|