பதிவு செய்த நாள்
21 அக்2021
20:43
புதுடில்லி:இந்தியாவில் பி –நோட்ஸ் எனும் பங்கேற்பு பத்திரங்கள் வாயிலாக செப்டம்பர் இறுதி வரை செய்யப்பட்டுள்ள முதலீடுகள் 97 ஆயிரத்து 751 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
தங்களை நேரடியாக பதிவு செய்துகொள்ளாமல் இந்திய பங்குச் சந்தையில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்பும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு, பதிவு செய்யப்பட்ட அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் பி – -நோட்டுகள் வாயிலாக முதலீடுகளை மேற்கொள்ள வாய்ப்புகள் வழங்குகின்றன.
பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ வழங்கி உள்ள தரவுகளின்படி, பி – நோட்ஸ் வாயிலாக பங்குகள், கடன் பத்திரங்கள் போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு செப்டம்பர் இறுதி நிலவரப்படி 97 ஆயிரத்து 751 கோடி ரூபாயாக உள்ளது. இதில் 86 ஆயிரத்து 624 கோடி ரூபாய் பங்குகளிலும், 10 ஆயிரத்து 873 கோடி ரூபாய் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|