பதிவு செய்த நாள்
26 அக்2021
22:00
பெங்களுரு:பெரிய வங்கிகளின் வலைதளம் போல போலியாக உருவாக்கி வாடிக்கையாளர்களின் பணத்தை சுருட்டுவது அதிகரித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த நார்டன் லேப்ஸ் நிறுவனம், மின்னணு பிரிவில் நுகர்வோரின் பாதுகாப்பு குறித்து, ஜூலை–செப்., வரை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிகரிப்புஅதில் கூறப்பட்டுள்ளதாவது:முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றை போல போலி வலைதளங்களை உருவாக்கி, வாடிக்கையாளர்களிடம் பண மோசடி செய்வது அதிகரித்துள்ளது.
மக்களிடம் விழிப்புணர்வு இருந்தால் இத்தகைய மோசடிகளை தடுக்கலாம். ‘தொழில்நுட்ப உதவிக்கு’ என கண் சிமிட்டும் ‘பாப்–அப்’ விளம்பரங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.அதை ‘கிளிக்’ செய்து நுழைவோரின் வங்கி விபரங்கள் திருடப்பட வாய்ப்பு உள்ளது.
அதனால், பாப்–அப் விளம்பரங்களை கிளிக் செய்வதை விட, உரிய நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலைதளத்திற்கு சென்று தேவையான விபரங்களை பெறுவதே சிறந்தது. ஆய்வில், பெரிய வங்கி களைப் போல போலி வங்கிகளின் வலைதளத்தில் வாடிக்கையாளர்களை ஏமாற்றி விபரங்களை திருடுவது அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
வலைதளங்கள் முடக்கம்
குறிப்பாக வங்கிகள் வழங்கும் ‘கிப்ட் கார்டு’ எனும் அன்பளிப்பு அட்டைகளில் தான் அதிக மோசடி நடக்கிறது.ஒரே நிறுவனம் பல கிப்ட் கார்டுகளை தயாரிப்பது தான் இதற்கு காரணம். உலகளவில் ஜூலை–செப்., வரை 1.23 கோடி போலி வலைதள முகவரிகள் முடக்கப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான, 86 கோடி வலைதளங்களின் செயல்பாடுகள் தடுக்கப்பட்டுள்ளன.இந்தியாவில் அச்சுறுத்தலான 1.72 கோடி வலைதளங்கள் முடக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|