மத்திய அரசுக்கு 4 நிறுவனங்கள்  533 கோடி ரூபாய்‘டிவிடெண்ட்’ வழங்கல் மத்திய அரசுக்கு 4 நிறுவனங்கள் 533 கோடி ரூபாய்‘டிவிடெண்ட்’ வழங்கல் ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
போலி வங்கி வலைதளம் வாடிக்கையாளர் பணம் சுருட்டல் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2021
22:00

பெங்களுரு:பெரிய வங்கிகளின் வலைதளம் போல போலியாக உருவாக்கி வாடிக்கையாளர்களின் பணத்தை சுருட்டுவது அதிகரித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த நார்டன் லேப்ஸ் நிறுவனம், மின்னணு பிரிவில் நுகர்வோரின் பாதுகாப்பு குறித்து, ஜூலை–செப்., வரை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிகரிப்புஅதில் கூறப்பட்டுள்ளதாவது:முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றை போல போலி வலைதளங்களை உருவாக்கி, வாடிக்கையாளர்களிடம் பண மோசடி செய்வது அதிகரித்துள்ளது.

மக்களிடம் விழிப்புணர்வு இருந்தால் இத்தகைய மோசடிகளை தடுக்கலாம். ‘தொழில்நுட்ப உதவிக்கு’ என கண் சிமிட்டும் ‘பாப்–அப்’ விளம்பரங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.அதை ‘கிளிக்’ செய்து நுழைவோரின் வங்கி விபரங்கள் திருடப்பட வாய்ப்பு உள்ளது.

அதனால், பாப்–அப் விளம்பரங்களை கிளிக் செய்வதை விட, உரிய நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலைதளத்திற்கு சென்று தேவையான விபரங்களை பெறுவதே சிறந்தது. ஆய்வில், பெரிய வங்கி களைப் போல போலி வங்கிகளின் வலைதளத்தில் வாடிக்கையாளர்களை ஏமாற்றி விபரங்களை திருடுவது அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

வலைதளங்கள் முடக்கம்

குறிப்பாக வங்கிகள் வழங்கும் ‘கிப்ட் கார்டு’ எனும் அன்பளிப்பு அட்டைகளில் தான் அதிக மோசடி நடக்கிறது.ஒரே நிறுவனம் பல கிப்ட் கார்டுகளை தயாரிப்பது தான் இதற்கு காரணம். உலகளவில் ஜூலை–செப்., வரை 1.23 கோடி போலி வலைதள முகவரிகள் முடக்கப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான, 86 கோடி வலைதளங்களின் செயல்பாடுகள் தடுக்கப்பட்டுள்ளன.இந்தியாவில் அச்சுறுத்தலான 1.72 கோடி வலைதளங்கள் முடக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)